search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
    X

    மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

    • 330 மனுக்கள் பெறப்பட்டன
    • மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது

    அரியலூர்

    அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 330 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து கலெக்டரால் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. மேலும், மாற்றுத்தி றனாளிகளிடமிருந்து பெறப்பட்ட மனுக்களில் உடனடி நடவடிக்கையாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.9,050 மதிப்பில் மூன்று சக்கர சைக்கிள் மற்றும் 8 பயனாளிகளுக்கு தலா ரூ.6,100 வீதம் ரூ.48,800 மதிப்பில் இலவச தையல் இயந்திரங்கள் என மொத்தம் 9 நபர்களுக்கு ரூ.57,850 மதிப்பில் நலத்திட்ட உதவிகைளகலெக்டர் வழங்கினார்.

    Next Story
    ×