என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெயங்கொண்டம் தாசில்தார் அலுவலகத்தில்  அமைதி பேச்சு வார்த்தை கூட்டம்
    X

    ஜெயங்கொண்டம் தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சு வார்த்தை கூட்டம்

    • ஜெயங்கொண்டம் தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சு வார்த்தை கூட்டம் நடைபெற்றது
    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம் நடைபெற இருந்தது.

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் குறுக்குரோடு பகுதி சுண்டிப்பள்ளத்தில் அமைந்துள்ள நடுநிலைப்பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் செல்லும் பிரதான சாலையில் திண்டிவனம்-கும்பகோணம் சாலை விரிவாக்கத் திட்டத்தின் மூலம் சுரங்கப்பாதை அமைத்து தர கோரியும், கங்கைகொண்டசோழபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மண்மலைக்கும் உலகளந்தசோழனுக்கும் இடையே உள்ள கருவாட்டு ஓடையில் தரைபாலம் அமைத்து தரக்கோரியும், குறுக்குரோடு பகுதியில் பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் இடமாக உள்ளதால் பொது சுகாதாரம் கருதி கழிப்பறை வசதி செய்து தரக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம் நடைபெற இருந்தது.

    இந்நிலையில் ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் துரை தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி முருகன், தனி வட்டாட்சியர் கலிலூர் ரஹ்மான், பட்டேல் நிறுவனத்தின் பொறியாளர் ஸ்ரீநிதிஷ் உள்ளிட்டோர் முன்னிலையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் வாலண்டினா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மணிவேல், ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட குழு தியாகராஜன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் கோவிந்தராஜ், ரவீந்திரன், முத்துசாமி, சங்கீதா, கனகவல்லி, சுந்தரமூர்த்தி, ஆட்டோ சங்கர், தலைவர் தமிழரசன், பசுபதி, சொக்கலிங்கம், இதயத்துல்லா மற்றும் கட்சி முக்கிய நிர்வாகிகள், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மேற்கண்ட கோரிக்கைகளை அரசு கவனத்திற்கு செலுத்தி நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×