search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எண்ணும் எழுத்தும் விழா
    X

    எண்ணும் எழுத்தும் விழா

    • திருமானூர் மேலவரப்பன்குறிச்சி மணிமேகலை பள்ளியில் நடைபெற்றது
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கிரீடம் சூட்டப்பட்டது

    திருமானூர்,

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலவரப்பன்குறிச்சி மணிமேகலை மான்ய தொடக்கப் பள்ளியில் எண்ணும், எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் என்ற கண்காட்சி விழா நடைபெற்றது.நிகழ்ச்சியில் வட்டார கல்விஅலுவளர் பரிமளம் தலைமை வகித்து மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் கல்வியின் பற்றிய முக்கியத்துவத்தை கூறினார். மேலாண்மை நிர்வாகி காந்திமதி முன்னிலை வகித்தார் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அழகிய மணவாளன் ஊராட்சி மன்ற தலைவர் லதா பாலு கலந்து கொண்டார். நிகழ்ச்சி ஏற்பாடுகளையும் பள்ளி தலைமைஆசிரியை மெரீனா செல்வராணி செய்திருந்தார். ஆசிரியர் மணிகண்டன் சிறப்புரையாற்றினார். மேலும் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கிடையே படைப்புகள் செய்தல், பாடல்கள் கதை கூறுதல், விலங்குகள் போல் ஒலி எழுப்புதல், ஆங்கிலம் வாசித்தல்போ ன்ற போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. அப்போது பரிசு பெற்றவர்களுக்கு கீரிடம் சூட்டப்பட்டது. நிறைவில் ஆசிரியை துர்கா தேவி நன்றி உரை நிகழ்த்தினார்.


    Next Story
    ×