search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கங்கைகொண்ட சோழபுரம் அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம்
    X

    கங்கைகொண்ட சோழபுரம் அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம்

    • கட்டும் பணி தொடங்கப்பட்டது
    • கங்கைகொண்ட சோழபுரம் அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்படுகிறது

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கங்கை கொண்டசோழபுரத்தில், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டியதை தொடர்ந்து, கங்கைகொண்டசோழபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் கட்டும் பணி, மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில், நடைபெற்றது. எம்.எல்.ஏ.கண்ணன் முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஈஸ்வரன், செயற்பொறியாளர் பிரபாகரன், முதன்மை கல்வி அலுவலர் விஜியலெட்சுமி, உடையார் பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ச.பரிமளம், ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் துரை, உதவி செயற்பொறியாளர் வாஹிதா பானு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகானந்தம் (வட்டார ஊராட்சி), அமிர்தலிங்கம் (கிராம ஊராட்சி), ஜெயங்கொண்டம் ஒன்றிய குழு தலைவர் கே.பி.என்.ரவிசங்கர், ஒன்றிய குழு துணை தலைவர் லதா கண்ணன், உதவி பொறியாளர் கெ.குமார், ஜெயங்கொண்டம் வேளாண்மை அட்மா குழு தலைவர் இரா.மணிமாறன், தலைமை ஆசிரியர் ஜெயந்தி, ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதிமுத்து கிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×