search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளியில் தேசிய பெண்கள் தினம்
    X

    அரசு பள்ளியில் தேசிய பெண்கள் தினம்

    பெண்கள் அதிகாரமிக்க பதவிகளுக்கு வர வேண்டும் என அறிவுரை

    அரியலூர்,

    அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொ) தனலட்சுமி தலைமை வகித்து பேசினார். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் அகிலா கலந்து கொண்டு பேசுகையில், பெண்களுக்கு அதிகாரமிக்க பதவிகளை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று குரல் கொடுத்தவர் சுதந்திர போராட்ட வீரர் சரோஜிநாயுடு அவர்களது பிறந்த நாளை தேசிய பெண்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. எனவே பெண் குழந்தைகள் நன்றாக படித்து கல்வியில் சிறந்து விளங்கி அதிகாரமிக்க பதவிகளை பெற வேண்டும் என்றார் நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் செல்வி முன்னிலை வகித்து பேசினார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் ரமேஷ், பத்மாவதி, கோகிலா, வீரபாண்டி, கபிலஷா, இளநிலை உதவியாளர் மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×