search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டாப்செட்கோ டாம்கோ சார்பில் அரியலூரில் கடன் வழங்கும் முகாம்
    X

    டாப்செட்கோ டாம்கோ சார்பில் அரியலூரில் கடன் வழங்கும் முகாம்

    • டாப்செட்கோ டாம்கோ சார்பில் அரியலூரில் கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது
    • கடன் விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை நகல், சாதிச்சான்றிதழ், பள்ளி மாற்றுச்சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் மற்றும் திட்டதொழில் அறிக்கை ஆகியவை இணைக்கப்பட வேண்டும்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் கீழ்கண்ட பகுதிகளில் டாப்செட்கோ, டாம்கோ சார்பில் நடைபெறும் லோன் மேளாவில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் விண்ணப்பித்து கடனுதவி பெறலாம் என கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துளளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாப்செட்கோ) மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாம்கோ) மூலம் சுயதொழில் செய்வதற்காக தொழிற் கடன் வழங்கும் திட்டம் செயல்படத்தப்பட்டு வருகிறது. தொழிற்கடன், தனிநபர் கடன், சுய உதவிகுழுக்களுக்கான சிறுகடன் மற்றும் கறவை மாடு வாங்க கடனுதவி பெற விரும்புவர்கள், மேலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய கல்வியில் சிறந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகள், உயர் கல்வி பயில்வதற்கான கல்வி கடன் பெற விரும்புவர்கள் கீழ்கண்டவாறு நடைபெறவுள்ள டாப்செட்கோ மற்றும் டாம்கோ லோன்மேளாவில் விண்ணப்பங்கள் பெற்று பயன்பெறலாம். வருகிற 4ம் தேதி அன்று அரியலூர் ஜிம்மா மசூதியில் காலை 10 மணி முதல் 2 மணி வரையும், கீழப்பழுவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பிற்பகல் 2 முதல் மாலை5 மணி வரையும் நடைபெற உள்ளது. ஜனவரி 10ம் தேதி அன்று மணப்பத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. 20ம் தேதி அன்று கோட்டியால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும், தென்னூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. கடன் பெற பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டார், சிறுபான்மையின மக்களாக இருத்தல் வேண்டும். வயது 18 முதல் 60க்குள் இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.3,00,000க்குள் இருக்க வேண்டும். மேலும் ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டும் கடனுதவி வழங்கப்படும். கடன் விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை நகல், சாதிச்சான்றிதழ், பள்ளி மாற்றுச்சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் மற்றும் திட்டதொழில் அறிக்கை ஆகியவை இணைக்கப்பட வேண்டும். மேலும் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விண்ணப்பங்கள் பெற்று பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


    Next Story
    ×