search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாயை கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை
    X

    தாயை கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை

    • தாயை கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது
    • பிரேத பரிசோதனை அறிக்கை முடிவில் தனம் கழுத்து நெறித்து கொல்லப்பட்டது தெரிய வந்தது.

    அரியலூர்,

    அரியலூர் அருகே வெங்கனூர், சன்னாவூர் கிராமத்தை சேர்ந்தவர் தனம். இவரது மகன் உதயகுமார். தனம் தனது மகளை வளர்மதி என்பவரின் மகனுக்கு திருமணம் செய்து வைத்தார். தனது மருமகனுக்கு சொத்தில் பங்கு தரவேண்டும் என தனம் அடிக்கடி கூறிவந்துள்ளார்.இதனால் தனத்திற்கும் அவரது மகன்உதயகுமாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்ப ட்டு வ ந்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு தனம் நிலத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, உதயகுமார் அவரை கீழே தள்ளி கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு வாயில் பூச்சி மருந்தை உற்றியுள்ளார். வெங்கனூர் போலிசில் சென்று நாடகமாடி தாய் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

    வெங்கனூர் போலீசார் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சப்இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், தற்கொலை வழக்கு பதிவுசெய்து தனம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்து மனைக்கு அனுப்பியுள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை முடிவில் தனம் கழுத்து நெறித்து கொல்லப்பட்டது தெரிய வந்தது. இதனால் வெங்கனூர் போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, உரிய விசாரணைக்கு பின்னர் உதயகுமாரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை அரியலூர் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அரசு தலைமை வழக்கறிஞர் சின்னதம்பி ஆஜராகி வாதாடினார். விசாரணை முடிவில் மாவட்ட நீதிபதி கிரிஸ்டோபர் தீர்ப்பு வழங்கினார். தாயை கொலை செய்த குற்றத்திற்காக உதயகுமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

    Next Story
    ×