என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்
- அடிப்படை வசதிகள் செய்து தர கோரி வாக்குவாதம்
- கவுன்சிலர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து கேள்வி
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் ரவிசங்கர் தலைமை தாங்கினார்.துணைத் தலைவர் லதா கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக வட்டார வளர்ச்சி அலுவலர் முருகானந்தம் வரவேற்று பேசினார்.கூட்டத்தில் தீர்மானங்களை கணக்கர் தாமோதரன் வாசித்தார்.தீர்மானங்களில் ஒன்றிய செலவினங்கள் மற்றும் 2022-23 ஆம் ஆண்டு 15 வது நிதிக்குழு மாநியம் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் பணிகள் முழுமையாக மேற்கொள்ள பணிகள் தேர்வு செய்திட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர் நடராஜன் பேசும்போது -2022-23 ஆண்டில் கவுன்சிலர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு யார் யார் எவ்வளவு பணிகள் செய்திருந்தனர் முடிக்கப்பட்டுள்ளனவா என்று கேள்வி எழுப்பினார்.ஒன்றிய கவுன்சிலர் பிரிதிவிராஜன்- உட்கோட்டை ஊராட்சியில் பாதை, மின்விளக்குகள் அமைக்க வேண்டிய தெற்கு ஆயுதகளத்தில் குடிநீர் பற்றாக்குறையை சீரமைக்க வேண்டும் என்றார்.உறுப்பினர் ரமேஷ் பேசும் போது. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள், மேல்நிலை நீர் தேக்க தொட்டி சீரமைக்க வேண்டும் என கூறினார்.உறுப்பினர் அருள்தாஸ்-வானதிரையன்பட்டினம் கீழத்தெரு, தெற்குதெரு ஆகிய பகுதிகளில் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் பைப் உள்ளேயே உடைந்து உள்ளது.மோட்டார் இயங்கவில்லை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை முன் வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்ஒன்றிய குழு தலைவர் ரவிசங்கர் பேசும் போது, உறுப்பினர்கள் கூறிய கோரிக்கைகளை விரைந்து நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். .கூட்டத்தில் உறுப்பினர்கள் சுப்ரமணியன், சிவகுமார், சத்யா, சம்பத்குமார், செந்தமிழ் செல்வி, நாகலட்சுமி, சுமதி, சீதை, ராஜேஸ்வரி, ஜெயந்தி, ரேவதி உட்பட ஒன்றிய அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.