என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரியலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம்
- அரியலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெவுள்ளது
- குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 28ந் தேதி நடைபெறவுள்ளது
அரியலூர்:
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 28ந் தேதி மாலை அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைப்பெறவுள்ளது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகள் மற்றும் மனுக்களுடன் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் வண்ண புகைப்படம் ஆகியவற்றுடன் அரியலூர் கோட்டாட்சியரிடம் நேரடியாக மனுக்களை வழங்கி பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
Next Story