என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரு சக்கர வாகனம் மோதி சிறுமி பலி
    X

    இரு சக்கர வாகனம் மோதி சிறுமி பலி

    • இரு சக்கர வாகனம் மோதி சிறுமி பலியானார்
    • போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி அருகேயுள்ள சின்னநாகலூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் அன்பழகன். இவரின் மகள் சாந்தி (வயது 17). இவர், தனது தாய் சித்ராவை (40) மொபட்டில் அழைத்துக் கொண்டு பெரிய நாகலூர்மேட்டுத்தெரு, கல்லங்குறிச்சி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மேட்டு தெரு வளைவில் திரும்பும் போது, எதிரே தத்தனூர் தெற்கு தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜசேகர்(26) என்பவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் எதிர்பாராத விதமாக இவர்கள் மீது மோதியது.இதில் பலத்த காயமடைந்த சாந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து சென்ற கயர்லாபாத் போலீசார், சாந்தியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். காயமடைந்த சித்ரா, ராஜசேகர் ஆகியோரையும் மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×