search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தையற்கலை தொழிலாளர்கள் சங்க  பொதுக்குழு கூட்டம்
    X

    தையற்கலை தொழிலாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்

    • தையற்கலை தொழிலாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது
    • ஓய்வூதியம் 3000 உயர்த்த தீர்மானிக்கபட்டது

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம். ஜெயங்கொண்டம் அருகே மீன் சுருட்டி தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு தையற்கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க சார்பில் மாவட்ட அளவிலான பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத் தலைவராக விசன் ரவி, செயலாளராக தேவேந்திரன், பொருளாளராக கண்ணன் மற்றும் துணை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநில துணை செயலாளர் கார்த்திகேயன் தேர்தல் முடிவுகளை வெளியிட்டார்.

    உடன் மாநில பொறுப்புத் தலைவர் பாண்டியன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் தனி நல வாரியம் வேண்டும், தையல் தொழிலாளர்களுக்கு ஓய்வு ஊதியம் 3000 ஆக உயர்த்தி தர வேண்டும், வருகின்ற 27ம் தேதி தையல் கலைஞர்கள் தினத்தை முன்னிட்டு கிளைகள் தோறும் கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணை செயலாளர் ராஜா பெரியசாமி நன்றி கூறினார்.


    Next Story
    ×