search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொது மக்களுக்கு குப்பை கூடைகள் வழங்கும் நிகழ்ச்சி
    X

    பொது மக்களுக்கு குப்பை கூடைகள் வழங்கும் நிகழ்ச்சி

    • பொது மக்களுக்கு குப்பை கூடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
    • தரம் பிரித்து வழங்குவதற்காக

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ரோட்டரி சங்கம் சார்பில் நகர்ப்புற தூய்மைப்படுத்தி திட்டம் மட்டும் குப்பை கூடைகள் வழங்கப்பட்டது. இதில் ஜெயங்கொண்டம் அனைத்து வார்டுகளிலும் உள்ள வீடுகளுக்கு 2 வழங்கப்பட்டு அதன் மூலம் வீட்டில் இருக்கும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என பிரித்து வைப்பதற்கு கூடை வழங்கினார்கள்.

    நகராட்சி முழுவதும் உள்ள வீடுகளில் குப்பைகளை தனித்தனியாக வைத்திருந்தால், துப்புரவு தொழிலாளர்கள் குப்பைகள் வாங்குவதற்கு ஏதுவாக இருக்கும் என்ற அடிப்படையில் குப்பை கூடைகள் கூடைகள் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் மூர்த்தி தலைமை தாங்கினார். மற்றும் நகராட்சி தலைவர் சுமதி சிவகுமார், துணைத் தலைவர் கருணாநிதி முன்னிலையில் வைத்தனர். ஜெயங்கொண்டம் ரோட்டரி சங்கத் தலைவர் ஜெயராமன், செயலாளர் சுரேஷ்குமார், பொருளாளர் ஆர் முருகன் ஏற்பாடு செய்திருந்தனர்.

    முன்னாள் தலைவர்கள் குமணன் செந்தில்வேல் விஜயகுமார் கிருபாநிதி மற்றும் உறுப்பினர்கள் கார்த்தி செந்தில் வேல் சிலம்பு செல்வன் சிவகார்த்திகேயன் சரவணன் ஆனந்த பத்மநாபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×