search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காசநோய் கண்டறியும் இலவச நடமாடும் புதிய டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம்
    X

    காசநோய் கண்டறியும் இலவச நடமாடும் புதிய டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம்

    • காசநோய் கண்டறியும் இலவச நடமாடும் புதிய டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தை அமைச்சர் தொடங்கிவைத்தார்.
    • வாரத்தில் 5 நாட்கள் செயல்படும்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், காசநோய் கண்டறியும் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:இந்த வாகனத்தில் மிக துல்லியமாக நோய் கண்டறியும் டிஜிட்டல் எக்ஸ்ரே, நோய் கண்டறியும் கணினி வசதி, குளிர் சாதனப் பெட்டி போன்ற சாதனங்கள் உள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.45 லட்சம் ஆகும். இந்த வாகனம் மூலம் மக்களின் இருப்பிடத்திற்கே சென்று எக்ஸ்ரே மூலம் நோய்கள் கண்டறியப்படும். நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு அன்றைய தினமே சளி பரிசோதனை மேற்கொள்ளப்படும்.சளி பரிசோதனையில் காசநோய் உறுதிப்படுத்தப்பட்டவர்களுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்படும். மேலும், நோயாளியின் ஆரோக்கியத்திற்காக ஊட்டசத்து நிறைந்த உணவுப் பொருட்கள் தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்படும். நோயாளிகளுக்கு நோயின் தன்மை மற்றும் நோய் குணமாகும் வழிமுறைகள், நோய் தடுப்பு முறைகள் போன்றவை விளக்கமாக எடுத்துரைக்கப்படும்.இவ்வாகனம் வாரத்தில் 5 நாட்கள் செயல்படும். இரண்டு வாரங்களுக்கு தொடர் இருமல், பசியின்மை, தொடர்ச்சியாக எடை குறைதல், சளியுடன் ரத்தம் வருதல் காசநோயின் அறிகுறியாக இருக்கலாம். இந்த அறிகுறியுடையோர் இவ்வாகனத்தை அணுகி சளி பரிசோதனை செய்துகொள்ளலாம். காசநோய் இல்லா அரியலூர் மற்றும் காசநோய் இல்லா தமிழகம் 2025 என்ற இலக்கினை அடைய இந்த வாகனம் உறுதுணையாக இருக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.காசநோய் கண்டறியும் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தினை பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து, மாவட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்லும் வகையில் வாகனத்தினை பயன்படுத்த போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, கு.சின்னப்பா எம்.எல்.ஏ., காசநோய் பிரிவு துணை இயக்குனர் நெடுஞ்செழியன், நகர் மன்ற தலைவர் சாந்தி கலைவாணன் உட்பட அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.




    Next Story
    ×