என் மலர்
உள்ளூர் செய்திகள்

போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு
- போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது
- மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்பு போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது எஸ்.எஸ்.சி. என்னும் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன், பாரத ஸ்டேட் வங்கியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கான இலவசப் பயிற்சி வகுப்பு இன்று (26-ந்தேதி) முதல் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும் இளைஞர்களுக்கு மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் அலுவலகத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.






