என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகள் குறைதீர் கூட்டம்
    X

    விவசாயிகள் குறைதீர் கூட்டம்

    • அரியலூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
    • கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது

    அரியலூர்,

    அரியலூரில் கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-இம்மாதம் இது நாள் வரை 429.24 மி.மீ. மழை பெய்துள்ளது. வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு தேவையான 2361 மெ.டன் யூரியா, 1082 மெ.டன் டி.ஏ.பி 615 மெ.டன் பொட்டாஷ் மற்றும் 1874 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை மையங்களில் இருப்பில் உள்ளது. 184 மெ.டன், தனியார் விதை விற்பனை மையங்கள் மூலம் 320 மெ.டன் என மொத்தம் 504 மெ.டன் விதை நெல் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது வேளாண்மை விரிவாக்க மையங்களில் 14.8 மெ.டன் நெல் விதைகள் கையிருப்பில் உள்ளது. சம்பா நெல் விதைகள் விதை கிராம திட்டத்தில் ஒரு கிலோ ரூ.17.50 வழங்கப்படுகிறது என்று அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில் கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, வேளாண்மை இணை இயக்குநர்(பொ) பழனிசாமி, அரசு அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×