search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தண்ணீர் வரத்து இல்லாததால் நாற்று நட முடியாமல் விவசாயிகள் தவிப்பு
    X

    தண்ணீர் வரத்து இல்லாததால் நாற்று நட முடியாமல் விவசாயிகள் தவிப்பு

    • தண்ணீர் வரத்து இல்லாததால் நாற்று நட முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.
    • தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க கோரிக்கை

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பொன்னாறு ஓடுகிறது. இந்த பொன்னாற்று பாசனம் மூலம் சுமார் 10 ஆயிரம் ஹெக்டர் விவசாயம் செய்யப்படுகிறது. இந்நிலையில் மதகை மூடி வைத்ததால் ஏற்பட்ட மணல் திட்டு காரணமாக பொன்னாற்றில் தண்ணீர் வரத்து இல்லாமல் சம்பா சாகுபடி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    கடந்த மாதங்களில் பெய்த மழையின் காரணமாக பொன்னாற்றில் தண்ணீர் வந்த நிலையில், விவசாயிகள் சம்பா நடவுக்காக இயந்திர நடவு செய்வதற்கு கை நடவு மற்றும் நேரடி நெல் விதைப்பு உள்ளிட்டவர்களுக்கு வயல்வெளிகளை சரி செய்து தண்ணீர் விட்டு சேர் அடித்து வந்த நிலையில், நடவு பணி தொடங்கும் தருவாயில், கடந்த சில நாட்களாக தண்ணீர் வராத காரணத்தினால் சேர் இறுகும் நிலையில் பறித்த நாற்றுகள் கருகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

    பொன்னாற்றில் தண்ணீர் வராததால் வாய்க்கால்கள் வறண்டு காணப்படுகிறது. இதனால் தற்போது தயார் நிலையில் உள்ள நாற்றுகள் கருகும் நிலை ஏற்படுவதால் சம்பா சாகுபடி பாதிக்கப்படும் நிலை உள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.

    இதுபற்றி அதே பகுதியை சேர்ந்த விவசாயி தட்சிணாமூர்த்தி கூறும்போது:-

    சம்பா சாகுபடிக்காக வயல்களை சேர் அடிச்சு தயார் நிலையில் வைத்திருக்கின்றோம். இந்த நேரத்தில் பொன்னாற்று வாய்க்காலில் தண்ணி வராத காரணத்தால் நடவு பாதிக்கப்பட்டு நிற்கின்றது. நாற்றுகள் வயலில் வைத்ததெல்லாம் காய்ந்து வருகிறது. வயலில் சேர் அடித்ததும் காய்ந்து கிடக்கிறது. தற்பொழுது விதைக்க முடியாத சூழல் உள்ளது. எனவே சம்பா சாகுபடி செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பயிர் செய்யும் வகையில் பொன்னாற்று வாய்க்காலில் முறையாக தடுப்பணையை கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். என தெரிவித்தார்.

    Next Story
    ×