என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை
    X

    பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை

    • பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
    • வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட வடுகபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 47), விவசாயி. இவர் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று வயிற்றுவலி அதிகமாகவே வாழ்க்கையில் வெறுப்படைந்த ராஜேந்திரன் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டு வயலில் மயங்கி கிடந்துள்ளார். இதையடுத்து அவரது உறவினர்கள் அவரை மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."

    Next Story
    ×