search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
    X

    மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

    • மேற்பார்வையாளர் அலுவலகம் அமைக்க வலியுறுத்தல்
    • மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது

    அரியலூர்:

    அரியலூரில் மின்சார வாரிய மேற்பொறியாளர் அலுவலகம் அமைக்க வேண்டும் என்றும் மாவட்ட வளர்ச்சிக் குழுத் தலைவர் சீனி.பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அரியலூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்ற மின்நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் அவர் அளித்த மனுவில் கூறியிருப்பது: அரியலூர் மாவட்டத்தில் அதிகப்படியான மின் இணைப்புகளும், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டத்தில் மின் வாரிய கோட்ட அலுவலகம் உள்ளதால், இம்மாவட்டத்தில் மேற்பார்வையாளர் அலுவலகம் அமைக்க வேண்டும்.அரியலூரிலுள்ள மின்சார வாரிய ஊழியர்கள் குடியிருப்பு பழுதடைந்து வருவதால், அவர்களுக்கு புதியதாக குடியிருப்புகளை கட்டிக் கொடுக்க வேண்டும். ரசலாபுரம் கம்பப் பெருமாள் கோயிலுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×