என் மலர்
உள்ளூர் செய்திகள்

தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
- அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பங்கேற்பு
- ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்
அரியலூர்,
அரியலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தலைவர் சிவமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது.சட்டதிருத்த குழு உறுப்பினர் சுபாசந்திரசேகர், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ., கண்ணன் கொள்கைபரப்பு துணைசெயலாளர் பெருநற்கிள்ளி, தலைமை செயற்குழு உறுப்பினர் பாலு, நகராட்சி தலைவர் சாந்தி கலைவாணன், மாவட்டதுணை செயலாளர் லதாபாலு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தெய்வஇளையராசா, நகரசெயலாளர் முருகேசன், கருணாநிதி , ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், அறிவழகன், உட்பட மாநில மாவட்ட நகர பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். மாவட்ட செயலாளரும் போக்குவரத்து துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கர், சட்டமன்ற தொகுதி பூத் கமிட்டி பார்வையாளர் சபாபதிமோகன் கலந்துகொண்டு சிறப்புரை யாற்றினர். கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது பற்றியும், சட்டமன்ற தொகுதியில் 50ஆயிரம் பேர் சேர்ப்பது குறித்தும் விரையில் தேர்தலுக்கு வலுவான பூத்கமிட்டி அமைப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.






