என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரியலூரில் மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
- அரியலூரில் மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
- ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் ஜெயவேல் தலைமையில் நடைபெற்றது
அரியலூர்,
அரியலூர் தனியார் விடுதியில் மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட செயலாளர் ஜெயவேல் தலைமையில் நடைபெற்றது. இதில் நகர செய லாளர் தாமஸ் ஏசுதாஸ் வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் வேல்முரு கன், மாவட்ட பொருளாளர் சக்திவேல், மாவட்ட துணைசெயலாளர் பாண்டியன், பொறியாளார் அணி துணைசெயலாளர் ராஜாபன்னீர் செல்வம், தலைமைசெயற்குழு உறுப்பினர் ஆனந்தன், இளைஞர் அணி ராஜா, தொழிற்சங்கம் வீரசிங்கம், தொண்டர் அணி கணேசன் உட்பட அனைத்து பிரிவு பொருப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அரியலூரில் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல வேண்டும். ஆகஸ்ட் மாதம் 25ந் தேதி தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டா டப்பட வேண்டும், அனைத்து கிராமங்களிலும் கொடியேற்றுதல், ஏழை, உளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும், அரியலூர் நகரின் அனைத்து பகுதிகளிலும், சாலைகளின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவுபடுத்திடவும், உட்பட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்ற ப்பட்டன.
கூட்ட முடிவில் ரவிக்குமார் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் தாமஸ்ஏசுதாஸ், மாவட்ட அவைதலைவர் ஜோசப்சத்தியமூர்த்தி, மாவட்டதுணை செ யலாளர்கள் தெய்வசி காமணி எழிலரசன், தங்கஜெயபால், ஒன்றிய செயலாளர்கள் அரியலூர் மணிகண்டன், திருமானூர் கிழக்கு ராஜகுமார், மேற்கு ஜெகதீசன்,தா.பழுர் அறிவழகன், ஆண்டிமடம் குமாரதேவன், செந்துறை செல்வராஜ், ஜெயங்கொண்டம் ஒன்றிய அவை தலைவர் கலைவாணன், நகர அவை தலைவர் ஆனஸ்ட்ராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தன், சின்னபாண்டு, பொதுக்குழு உறுப்பினர் ஜெயவேல் அரியலூர் ஒன்றியக்குழு துணை தலைவர் சரஸ்வதி ஜெயவேல் , மாவட்ட தொழிற்சங்க நிர்வாகி பாண்டியன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.






