search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாரம்பரிய நெல் விதைகள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வினியோம்
    X

    பாரம்பரிய நெல் விதைகள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வினியோம்

    • பாரம்பரிய நெல் விதைகள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது.
    • ஏக்கர் ஒன்றுக்கு 20 கிலோ விதைகள் போதுமானதாகும்

    அரியலூர்:

    தமிழக அரசின் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் அரியலூர் மாவட்டத்தில் சாகுபடி செய்திட உற்பத்தி செய்யப்பட்ட தூயமல்லி, மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுணி, சீரக சம்பா போன்ற நெல் ரகங்களின் விதைகள் 2.5 மெட்ரிக் டன் அளவு அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு வினியோகத்திற்கு தயார் நிலையில் உள்ளது. மேற்கண்ட பாரம்பரிய நெல் விதைகளானது வருகிற சம்பா பருவத்திற்கு, கிலோ ஒன்றுக்கு ரூ.25 வீதம் நிர்ணயம் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் வினியோகம் செய்யப்பட உள்ளது. ஏக்கர் ஒன்றுக்கு 20 கிலோ விதைகள் போதுமானதாகும். மொத்த விதையளவில் 80 சதவீதம் பொது பிரிவு விவசாயிகளுக்கும், 20 சதவீதம் பட்டியல் இன, பழங்குடியின விவசாயிகளுக்கும் வழங்கப்படும். விவசாயி ஒருவருக்கு ஒரு ஏக்கருக்கு உரிய விதைகள் மட்டுமே வழங்கப்படும். குறிப்பாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராம ஊராட்சியை சேர்ந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது. பாரம்பரிய நெல் ரகங்கள் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. உடலுக்கு வலிமை சேர்க்கும் தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. பாரம்பரிய நெல் ரக அரிசியை உண்ணும்போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எனவே அரியலூர் மாவட்டத்தில் பாரம்பரிய நெல் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி விதைகளை பெற்று பயன்பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

    Next Story
    ×