search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு குறித்த ஆலோசனை கூட்டம்
    X

    பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு குறித்த ஆலோசனை கூட்டம்

    • 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்
    • ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் வெற்றிச்செல்வி தலையைல் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாவட்ட கல்வி அலுவலர் ஜெயா, மாவட்ட கல்வி அலுவலர் ராஜா, ஜெயங்கொண்டம் தலைமை ஆசிரியர் ராஜ்குமார், துணை ஆசிரியர் இளங்கோவன், மீன்சுருட்டி தலைமை ஆசிரியர் மோகன் உள்ளிட்ட கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர். பத்தாம் வகுப்பிற்கான விடை தாள் மதிப்பீடு செய்யும் பணியின் போது மேற்கொள்ள வேண்டிய ஆய்வுகள் குறித்து முதன்மை தேர்வாளர்கள் மற்றும் கூர் ஆய்வாளர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×