என் மலர்
உள்ளூர் செய்திகள்

இரு தரப்பினர் மோதல்-சாலை மறியல்
- அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதைலை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
- தகவல் அறிந்து அங்கு வந்த, அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், திருமானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், திருமானூர் காந்தி நகரை சேர்ந்தவர்களுக்கும், மற்றொரு தரப்பினருக்கும், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டது. இதையடுத்து திருமானூர் போலீசார் ஒரு தரப்பினர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை, காந்தி நகரை சேர்ந்த விநாயகமூர்த்தி, குமரவேல் ஆகியோர் இருசக்கர வாகனத்தில், திருமானூர் சன்னிதி கீழவீதியில் சென்றனர்.
அப்போது, இவர்களுக்கும் மற்றொரு தரப்பை சேர்ந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், குமரவேல், விநாயகமூர்த்தி ஆகிய இருவரும் காயம் அடைந்தனர்.
இதனையறிந்த காந்தி நகரை சேர்ந்த மக்கள் திருமானூர் பேருந்து நிறுத்தம் அருகே அரியலூர் தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில், தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த, அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், திருமானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
தாக்கியவர்களை உடன் கைது செய்ய வேண்டும் என் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
பேச்சுவார்த்தையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உத்திரவாதம் கொடுத்த பின்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அரியலூர்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது






