search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செல்வமுத்து மாரியம்மன் கோவில் பால்குட விழா
    X

    செல்வமுத்து மாரியம்மன் கோவில் பால்குட விழா

    • செல்வமுத்து மாரியம்மன் கோவில் பால்குட விழா நடந்தது
    • ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    அரியலூர்:

    அரியலூர் மணியன்குட்டை தெருவிலுள்ள செல்வமுத்துமாரியம்மன் கோவிலில் பால்குடத் திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி, அரியலூர் பள்ளேரியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட உற்சவர் செல்வ முத்துமாரியம்மனுடன் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்தும், அலகு குத்தியும் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பாலை கொண்டு மூலுவர் செல்வமுத்து மாரியம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இரவு அம்மன் வீதியுலா நடைபெற்றது. அப்போது வீடுதோறும் அம்மனுக்கு மாவிளக்கு போட்டு வழிபட்டனர்.

    Next Story
    ×