என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு தொழில் நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
- மாணவர்களுக்கு தொழில் நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது
- அரசு பாலிடெக்னிக் கல்லூரி
அரியலூர்
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அரசு பாலிக்டெக்னிக் கல்லூரியில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம் சார்பில் மாணவர்களுக்கு சிறப்பு தொழில் நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, அக்கல்லூரியின் வேளாண்மை துறை தலைவர் அப்புதீன் தலைமை வகித்தார். அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரமேஷ் பங்கேற்று, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் செயல்பாடுகள் குறித்தும் மெய் நிகர் கற்றல் இணையதளம், தமிழ்நாடு தனியார் வேலை இணையம் குறித்து எடுத்துரைத்தார்.
மாவட்ட தொழில் மையத்தின் திட்ட மேலாளர் விக்னேஷ், பெரம்பலூர் விஜய்ஆனந்த், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக இளநிலை அலுவலர் வினோத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு, சுயதொழில் , வங்கிக் கடன் குறித்தும், அதே போல் மத்திய மாநில அரசு பணிக்கான போட்டித் தேர்வுகளை எவ்வாறு எதிர்கொள்ளது , திறன் பயிற்சியின் அவசியம் மற்றும் தனியார் துறை பணியமர்த்தம் குறித்தும் விளக்கினர். இந்நிகழ்ச்சியில் 150 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகல் கலந்து கொண்டு பயனடைந்தனர்.






