என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழிப்புணர்வு கூட்டம்
    X

    விழிப்புணர்வு கூட்டம்

    • விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
    • காவல் நிலையம் சார்பில் நடைபெற்றது

    அரியலூர்:

    உடையார்பாளையம் காவல் நிலையம் சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. சப்இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் பேசும் போது, அரியலூர் மாவட்டத்தில் செந்துறை, கூவாகம் ஆண்டிமடம் காவல் நிலைய சரகங்களில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ச்சியாக இரவு நேரங்களில் திருட்டு, தூக்கத்தில் இருக்கும் பெண்களிடம் செயின் பறிப்பு போன்ற சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தாங்கள் தங்கள் கிராம மக்களிடம் இரவு நேரங்களில் கதவை திறந்து வைத்துக் கொண்டு தூங்க வேண்டாம் எனவும், சந்தேகப்படும்படியான வெளியூர் மற்றும் வெளி மாநில நபர்கள் தங்கள் கிராமத்தில் நடமாட்டம் இருந்தால் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

    Next Story
    ×