என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூரில் ஆலோசனை கூட்டம்
    X

    அரியலூரில் ஆலோசனை கூட்டம்

    • மகளிர் உரிமை திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
    • கலெக்டர் தலைமையில் நடைபெற்றது

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்ப முகாம் குறித்த ஆலோச னைக்கூட்டம்,மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அருண்ராய் தலைமையில் நடைபெற்றது, அரியலூர் மாவட்டத்தில்,கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்ப முகாம்கள், முதல் கட்டமாக 24-ந் தேதி முதல் வருகிற 4-ந் தேதி வரை அரியலூர் வட்டத்தில் 163 நியாய விலைக் கடை பகுதிகள் மற்றும் செந்துறைவட்டத்தில் 74 நியாய விலைக் கடை பகுதிகள் ஆக மொத்தம் 237 நியாய விலைக் கடை பகுதிகளில் நடைபெற உள்ளது. இரண்டாம் கட்டமாக 5 -ந் தேதி முதல் 16-ந் தேதி வரை ஜெயங்கொண்டம் வட்டத்தில் 162 நியாய விலைக் கடை பகுதிகள் மற்றும் ஆண்டிமடம் வட்டத்தில் 67 நியாய விலைக் கடை பகுதிகளில் ஆக மொத்தம் 229 நியாய விலைக் கடை பகுதிகளில் நடைபெற உள்ளது. விண்ணப்பப் பதிவு முகா ம்கள் ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து முகாம் நாட்களிலும் காலை 9.30 முதல் பகல் 1.00 மணி வரையிலும்,பிற்பகல் 2.00 மணி முதல் 5.30 மணி வரை நடத்தப்படும். இதில் முதல் கட்ட முகாமிற்கான விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள்,அரியலூர் மற்றும் செந்துறை வட்டங்களில் மட்டும் 20-ந் தேதி அன்று ளமுதல் அந்தந்த நியாய விலைக் கடை பணியாளர்கள் மூலமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு சென்றுவழங்கப்பட்டு வருகிறது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் வகையில் அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×