search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி
    X

    ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி

    • ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி நடைபெற்றது
    • திருப்பலியில் கலந்து கொண்ட அனைவரின் நெற்றியிலும் சாம்பல் பூசினார்.

    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் திருகாவலூர் எனும் ஏலாக்குறிச்சியில் உள்ள புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பங்கு தந்தை அதிபர் தங்கசாமி இந்த சிறப்பு திருப்பலியை நிறைவேற்றினார். திருப்பலியில் அவர் பிரசங்கம் செய்த போது, இந்த தவக்காலம் என்பது மன மாற்றத்திற்கான மனம் திருந்துவதற்கான காலமாகும். நாம் செய்த பாவங்களை நினைத்து மனம் திரும்பி வாழும் காலமாகும். மனிதன் கடவுளைத் தேடும் காலமாகும் என்று பேசினார். அதன் பின்னர் உதவி பங்குத்தந்தை ஞான அருள்தாஸ் உடன் இணைந்து திருப்பலியில் கலந்து கொண்ட அனைவரின் நெற்றியிலும் சாம்பல் பூசினார்.

    Next Story
    ×