search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் சேருவதற்கு விண்ணப்பிக்க அழைப்பு
    X

    ராட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் சேருவதற்கு விண்ணப்பிக்க அழைப்பு

    • ராட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • தேர்வு வருகிற டிசம்பர் 3-ந்தேதி நடைபெறவுள்ளது

    அரியலூர்

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் டேராடூனில் உள்ள ராட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் அடுத்த ஆண்டு ஜூலை 2023 மாத பருவத்தில் சேருவதற்கான தேர்வு வருகிற டிசம்பர் 3-ந்தேதி அன்று நடைபெறவுள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இத்தேர்வுகள் சென்னை நகரிலும் நடைபெற உள்ளது. இத்தேர்வு எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு ஆகியவை கொண்டதாக இருக்கும். எழுத்து தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மட்டும் நேர்முக தேர்வு நடத்தப்படும். இத்தேர்வுக்கான விண்ணப்பப் படிவம், தகவல் மற்றும் முந்தைய தேர்விற்கான வினாத்தாட்கள் தொகுப்பை "கமாண்டன்ட், ராட்ரிய இந்திய ராணுவ கல்லூரி, கர்ஹிகான்ட், டேராடுன், உத்தரகாண்ட் 248003" என்ற முகவரிக்கு காசோலை அனுப்பி அல்லது ராட்ரிய இந்திய ராணுவ கல்லூரி இணைய வழியாக பொது பிரிவினர் ரூ.600-ம் செலுத்தியும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர் ரூ.555-ம் செலுத்தியும் பெற்று கொள்ளலாம். விண்ணப்பதார்களின் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் 13 வயதை அடையாதவராகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் மேற்குறிப்பிட்ட ராணுவ கல்லூரியில் சேர அனுமதிக்கப்படும் பொழுது, அதாவது 1.7.2023-ல் அங்கீகரிக்கப் பெற்ற பள்ளியில் 7-ம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் (இரட்டையாக) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய சாலை, பூங்கா நகர், சென்னை-600003 என்ற முகவரிக்கு வருகிற 15-ந்தேதி மாலை 5.45 மணிக்குள் வந்து சேர வேண்டும். மேலும் விவரங்களுக்கு ராட்ரிய இந்திய ராணுவ கல்லூரியின் இணையதளத்தை www.rimc.gov.in ல் பார்க்கவும் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது."

    Next Story
    ×