என் மலர்
உள்ளூர் செய்திகள்

அனைத்து கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம்
- அரியலூரில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
- மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் வாக்கு சாவடி மாற்றம் குறித்து ஆலோசனை
அரியலூர்
அரியலூர் மாவட்ட வரைவு வாக்குச்சாவடி மையங்களின் பட்டியலை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்டார். அதன் பின்னர் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில்,
அரியலூர் சட்ட மன்ற தொகுதியில் 2,54,684 வாக்காளர்களும், 303 வாக்குச்சாவடி மையங்களும், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 2,52,401 வாக்காளர்களும், 290 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளன. இதில்
அரியலூர் சட்டமன்ற தொகுதியில், வாக்குச்சாவடி அமைவிடம், கட்டிட மாற்றம் பிரிவின் கீழ் 5 வாக்குச்சாவடிகளும், பெயர் மாற்றம் பிரிவின் கீழ் 3 வாக்குச்சாவடி மையங்களும், ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில், வாக்குச்சாவடி பெயர் மாற்றம் பிரிவில் 20 வாக்குச்சாவடி மையங்களும், வாக்குச்சாவடி அமைவிடம் மற்றும் கட்டிட மாற்றம் பிரிவின் கீழ் 1 வாக்குச்சாவடி என அரியலூர் மாவட்டத்திற்கு மொத்தம் 29 வாக்குச்சாவடி மையங்கள் மறுசீரமைக்கப்பட வாக்காளர் பதிவு அலுவலர்களிடமிருந்து முன்மொழிவுகள் பெறப்பட்டது.
மேற்படி மறுசீரமைக்கப்பட உள்ள வரைவு வாக்குச்சாவடி மையங்கள் தொடர்பாக ஆட்சேபனை அல்லது கருத்து ஏதேனும் இருப்பின் அது குறித்து ஒரு வார காலத்தில் சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்களிடமோ (அல்லது) உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் வட்டாட்சியர்களிடமோ எழுத்துப்பூர்வமாக தெரிவிக்குமாறு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகளுக்கு, கலெக்டர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்கலைவாணி, வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.