search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
    X

    அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
    • முன்னாள் அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் பூத் கமிட்டி அமைப்பது குறித்து மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட செயலாளரும்,முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன்தலைமையில் நடைபெற்றது.மாவட்ட பொருளாளர் அன்பழகன் வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் ராமஜெயலிங்கம், மாவட்ட துணை செயலாளர் தங்க பிச்சமுத்து, தாமரைக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பிரேம்குமார், கூட்டுறவு பால்உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பாஸ்கர், அணிச்செயலாளர்கள் மாணவரணி சங்கர்,இளைஞரணி சிவசங்கர்,மகளிரணி ஜீவா,சிறுபான்மைபிரிவு அக்பர்ஷெரிப், வக்கில் பிரிவு வெங்கடாஜலபதி, ஒன்றிய செயலாளர்கள் அரியலூர் செல்வராஜ், பாலு, திருமானூர் வடிவழகன், அன்பழகன், ஆண்டிமடம் மருதமுத்து, ராமச்சந்திரன், ஜெயங்கொண்டம் கல்யாணசந்தரம், விக்கிரம பாண்டியன்,தா.பழர் அசோகன், வைத்தியநாதன், நகரசெயலாளர்கள் அரியலூர் செந்தில், ஜெயங்கொண்டம் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் வைகோசிவ பெருமாள், செல்லையா, நகராட்சி கவுன்சிலர்கள் இஸ்மாயில், யூனியன் சேர்மன் செந்தமிழ்செல்வி, வக்கில் சிவஞானம், பாஸ்கர், மகளிரணி பாப்பாத்தி, சினுக்கா, செல்வாம்பாள் உட்பட அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும்கலந்துகொண்டனர். மாவட்டசெ யலாளரும், முன்னாள் அரசுதலைமை கொறடாவுமான தாமரை. எஸ்ராஜேந்திரன்ேபபேசும்போது,விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரஇருக்கின்றது. சட்டமன்ற தேர்தலும் வரவாய்ப்பு இருக்கின்றது. பூத் கமிட்டி அமைக்கும் பணியினை மிகவிரைவாக முடிக்கவேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் 40ம் நமதே என்ற லட்சியத்தோடு பணியாற்ற வேண்டும். மதுரையில் அதிமுக வெற்றிவிழா எழுச்சி மாநாட்டை இந்தியாவே திரும்பி பார்த்தது. மற்ற அரசியல் கட்சிகளைவிட அதிக தொண்டர்களை கொண்ட இயக்கம் அதிமுக. வெற்றி ஒன்றே நமது இலக்காக அமையவேண்டும் என பேசினார். கூட்ட முடிவில் ஜெயங்கொண்டம் நகர செயலாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.

    Next Story
    ×