என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரியலூர் மக்கள் குறைதீர் கூட்டம்
- பொதுமக்களிடமிருந்து 314 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன
- அரியலூரில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 314 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.கூட்டத்துக்கு கலெக்டர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தலைமை வகித்து, பொது மக்கள் அளித்த மனுக்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர் பயனாளி ஒருவருக்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் பணி நியமன ஆணையை வழங்கினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ம.ச.கலைவாணி, தனித்துணை ஆட்சியர் இளங்கோவன், மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Next Story






