search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆண்டிமடத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் - ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம்
    X

    ஆண்டிமடத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் - ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம்

    • ஆண்டிமடம் தாலுகாவில் தீயணைப்பு நிலையம் அமைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்,
    • ஆண்டிமடத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி பொது மருத்துவமனையாக 24 மணி நேரமும் இயங்கக்கூடிய மருத்துவமனை அமைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்,

    அரியலூர் ;

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஆண்டிமடம் ஊராட்சி அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்ட அரங்கில் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் ஒன்றிய பெருந்தலைவர் மருதமுத்து தலைமையில் கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா ஒன்றிய துணைத் தலைவர் வைத்தி தேன்மொழி முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் ஆண்டிமடம் தாலுக்கா உருவாக்கப்பட்டு 4 ஆண்டுகள் கடந்தும் ஒரு லட்சம் 25ஆயிரம் வாக்காளர்கள் உள்ள தாலுகாவில் மக்கள் பயன்பெறும் விதமாக ஆண்டிமடம் தாலுகாவில் தீயணைப்பு நிலையம் அமைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆண்டிமடத்தில் தாலுக்கா நீதிமன்றம் அமைவதற்கு நடவடிக்கை எடுக்க எடுக்க வேண்டும்.

    ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி பொது மருத்துவமனையாக 24 மணி நேரமும் இயங்கக்கூடிய மருத்துவமனை அமைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், அழகாபுரத்தில் இருந்து ஓலையூர் செல்லும் சாலையை பேருந்து போக்குவரத்து வழித்தடம் என்பதால் இந்த இந்த சாலையை ஊராட்சி ஒன்றிய இதயத்திற்கு உட்பட்ட சாலையை நெடுஞ்சாலைத் துறையில் ஒப்படைத்து நெடுஞ்சாலை துறை மூலம் தரமான சாலை போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒவ்வொரு கவுன்சிலரும் அவர்கள் உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×