search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    70 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்
    X

    70 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்

    • அரியலூரில் 70 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது
    • பிரபல அசைவ உணவகத்துக்கு சீல் வைப்பு

    திருச்சி,

    நாமக்கல்லில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சவர்மா சாப்பிட்ட இளம் பெண் பலியானார். மேலும் 10க்கும் மேற்பட்ட மாண வர்கள் மயக்கம் அடை ந்தனர்.இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதை த்தொடர்ந்து ஹோட்ட ல்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டு வருகி ன்றனர்.

    அரியலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அரியலூர் நகரில் உள்ள பல்வேறு உணவகங்களில் சோதனை மேற்கொண்டனர்.இதில் காலாவதியான கெட்டுப்போன சிக்கன், மட்டன், காடை போன்ற 70 கிலோ இறைச்சியினை பறி முதல் செய்தனர்.மேலும் அரியலூர் கலெ க்டர் அலுவலக சாலையில் உள்ள பிரபல அசைவ உணவகத்திற்கு அதிரடியாக சீல் வைத்தனர்.மேலும் 3 கடைகளுக்கு அபராதம் விதித்து குறைகள் இருந்த 3 உணவகங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்தனர்.இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கள் கூறும் போது, இறைச்சி பாக்கெட்டுகளை ஓபன் செய்தால் உடனடியாக பயன்படுத்த வேண்டும் இறைச்சிகளை அதற்குரிய வெப்ப நிலையில் சரிவர பராமரிக்க வேண்டும் சைவ, அசைவ பொருட்களை தனித்தனியாக குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும். சமையலறையை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என அவர்கள் கூறினர்.

    Next Story
    ×