என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அரியலூர் மாவட்டத்தில் 12,768 பயனாளிகளுக்கு ரூ.150.58 கோடி கடனுதவி
- அரியலூர் மாவட்டத்தில் 12,768 பயனாளிகளுக்கு ரூ.150.58 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது
- மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வழங்கினார்
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் நடைபெற்ற மாபெரும் கடன் வழங்கும் விழாவில் பயனாளிகளுக்கு வங்கி கடன் ஒப்புதல்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் எரிசக்தித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி முன்னிலையில் வழங்கினார். அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கியாக இருக்கும் பாரத ஸ்டேட் வங்கியோடு மற்ற வங்கிகளும் இணைந்து முதல் 3 வாரத்தில் 12 ஆயிரத்து 768 பயனாளிகளுக்கு ரூ.150.58 கோடி மதிப்பில் முன்னூரிமை துறை கடனாக வழங்கி உள்ளது.
இதில் வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த துறைகளில் 12 ஆயிரத்து 498 பயனாளிகளுக்கு ரூ.137.54 கோடியும், மாவட்ட தொழில் மையம் திட்டங்களில் பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தில் 9 பயனாளிகளுக்கு ரூ.34.06 லட்சமும், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் 9 பயனாளிகளுக்கு ரூ.35.54 லட்சமும் மற்றும் புதிய தொழில்முனைவோர் மற்றும் நிறுவன மேம்பாட்டு திட்டத்தில் 1 பயனாளிக்கு ரூ.10 லட்சமும், தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழக திட்டத்தில் 28 பயனாளிகளுக்கு ரூ.54.38 லட்சமும், 91 சுய உதவி குழுக்களுக்கு ரூ.5.13 கோடியும், பிரதம மந்திரியின் தெரு வியாபாரிகளின் ஆத்மா நிர்பர் நிதி திட்டத்தில் 12 பயனாளிகளுக்கு ரூ.1.85 லட்சமும், முத்ரா திட்டத்தில் 57 பயனாளிகளுக்கு ரூ.77.15 லட்சமும், 22 பயனாளிகளுக்கு கல்வி கடன் ரூ.95 லட்சமும், 18 பயனாளிகளுக்கு வீட்டுக்கடன் ரூ.3.69 கோடியும் மற்றும் இதர கடன்களாக 23 பயனாளிகளுக்கு ரூ.1.13 கோடியும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தாட்கோ மாவட்ட மேலாளர் பரிமளா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் லட்சுமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் லயனல் பெனடிக்ட், ரிசர்வ் வங்கி மாவட்ட முன்னோடி அலுவலர் வெங்கடேசன், நபார்டு மாவட்ட வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) வெங்கடேசன் மற்றும் அனைத்து வங்கிகளின் மேலாளர்களும் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்