search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ. 14.35 கோடியில் மருதையாற்றில் பாலம் கட்டும் பணி
    X

    ரூ. 14.35 கோடியில் மருதையாற்றில் பாலம் கட்டும் பணி

    • ரூ. 14.35 கோடியில் மருதையாற்றில் பாலம் கட்டும் பணிக்கு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அடிக்கல் நாட்டினார்
    • பிரதான சாலையி–லிருந்து 8 கி.மீ தொலைவு உள்ளது.

    அரியலூர்:

    அரியலூர் ஊராட்சி ஒன்றியம்,ஆதனூர்-–மழவரா–யநல்லூர் சாலை–யில் நெடுஞ்சாலை–த்துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் மருதையாற்றின் மேல் பாலம் கட்டும் பணிக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவ–சங்கர் அடிக்கல் நாட்டி பணிகளைத் துவக்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி அரியலூர்சட்ட–மன்ற உறுப்பினர் கு.சின்ன–ப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றி––யம், ஆதனூர்மற்றும் மழவ–ரா–யநல்லூர் இடையே மருதையாற்றில் வெள்ளப்பெருக்கின் போது பொதுமக்கள் பயன்பாட்டி–ற்கு பெரிதும் இடையூராக சாலை போக்குவரத்து உள்ளதாலும் ஓரியூர்சாலை வழியாக ஆதனூர்செல்ல–வதற்கு பிரதான சாலையி–லிருந்து 8 கி.மீ தொலைவு உள்ளது.

    பாலம் கட்டும் பணி முடிவடைந்தால் 3கிமீ பிர–தான சாலையை அடைய முடியும்என பொது–மக்களின் கோரி–க்கை–யினை ஏற்று தமி–ழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க ஆத–னூர்-மழவராயநல்லூர் சாலையில் நபார்டுமற்றும் கிராம சாலைகள் திட்ட–த்தின் கீழ் 0.6 கி.மீ-ல் நபார்டு வங்கியின் ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியின் கீழ் ரூ.14.35 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டுமானப் பணியினை போக்குவரத்துத் துறை அமைச்சர் அடிக்கல் நாட்டி பணிகளைத் துவக்கி வைத்தார்.

    பணிகள் நடைபெறும் இடத்தினை பார்வையிட்டு பொதுமக்கள் தற்போது சாலையினை பயன்படுத்தும் விதம் குறித்து கேட்டறிந்து பாலத்தின் நீளம் மற்றும் அகலம் குறித்து அலுவல–ர்களிடம் கேட்டறிந்தார். இப்பாலத்தில் 18 மீ நீளமுள்ள 10 கண்கள் அமைக்கப்பட உள்ளது என துறை அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டது.

    மேலும், பாலப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் கட்டி முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் எனவும், சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு போக்கு–வரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவுறுத்தினார்.

    Next Story
    ×