search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூரில் 120 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை
    X

    அரியலூரில் 120 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை

    • 17ம் தேதி வரை தொடர்ந்து நடக்கிறது
    • பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை தொடரும் என கலெக்டர் அறிவிப்பு

    அரியலூர்,

    அரியலூர் நகராட்சியில் உள்ள தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் தற்பொழுது நகராட்சி சார்பில் நடைபெற்று வருகிறது. 17-ந்தேதி வரை இம் முகாம் நடைபெறுகிறது. இதுவரை அரியலூர் நகராட்சிப் பகுதிகளில் உள்ள சுமார் 120 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு வாகனத்தின் மூலம் பாதுகாப்பாக கீழப்பழுவூரில் உள்ள நகராட்சி உரக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்குள்ள நாய்கள் கருத்தடை செய்வதற்கான மையத்தில் கருத்தடை அறுவை சிகிச்சையும் மற்றும் வெறிநோய் தடுப்பூசி செலுத்துதல் பணி மேற்கொள்ளப்பட்டது. அரியலூர் நகராட்சியில் மீதமுள்ள அனைத்து தெரு நாய்களும், முகாம் நடைபெறும் மற்ற நாட்களில் பிடிக்கப்பட்டு கருத்தடை அறுவை சிகிச்சை மற்றம் வெறிநோய் தடுப்பூசி செலுத்தவும் அரியலூர் நகராட்சியின் சார்பில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அரியலூர் நகராட்சியில் வசிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யவும் இதுபோன்ற பிற நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×