search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இடஒதுக்கீடு வழக்கில் வாதத்தை  முன்வைத்த மூலனூர் வக்கீல்
    X

    மூலனூர் வக்கீல் அஜய்பிரபு.

    இடஒதுக்கீடு வழக்கில் வாதத்தை முன்வைத்த மூலனூர் வக்கீல்

    • உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி லலித் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் அமர்வு தீர்ப்பளித்தது.
    • உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளை கையாண்டு வரும் அஜய்பிரபுவை மூலனூர் பகுதி பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

    தாராபுரம்:

    பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு அளித்த சட்டத்திருத்தம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி லலித் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் அமர்வு தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் பல்வேறு புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் பங்கேற்று தங்கள் வாதங்களை முன் வைத்தனர். அதுபோல திருப்பூர் மாவட்டம் மூலனூரை சேர்ந்த வக்கீல் அஜய் பிரபுவும் பங்கேற்றார். எந்தவித பெரிய பின்புலமும் இல்லாமல் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளை கையாண்டு வரும் அஜய்பிரபுவை மூலனூர் பகுதி பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

    Next Story
    ×