search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு விழா
    X

    அஞ்செட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

    அரசு பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு விழா

    • தலா 5 ஆயிரம், 3 ஆயிரம், 2 ஆயிரம் பரிசு தொகையை, அஞ்செட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கர் வழங்கி பாராட்டினார்.
    • நீட் தேர்வில் 536 மதிப்பெண்கள் பெற்ற மாணவன் மாதவனுக்கு 5 ஆயிரம், 330 மதிப்பெண் பெற்ற மாணவி ஓவியாவிற்கு 5 ஆயிரமும் வழங்கினார்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், பொதுத்தேர்வில் முதல் 3 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடை பெற்றது.

    இப்பள்ளியில் பிளஸ்-2 மாணவன் மது 544 மதிப்பெண் பெற்று முதல் இடமும், மாணவி சோபா 537 மதிப்பெண் பெற்று 2-ம் இடமும், 515 மதிப்பெண் பெற்ற யாக மணி இடமும் பெற்றுள்ளனர். அதேபோல், 10-ம் வகுப்பில் 465 மதிப்பெண்கள் பெற்று தீபக் குமார் முதல் இடமும், நவீன் குமார் 437 மதிப்பெண் பெற்று 2-ம் இடமும்,

    ராகுல் 435 மதிப்பெண் பெற்று 3-ம் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு தலா 5 ஆயிரம், 3 ஆயிரம், 2 ஆயிரம் பரிசு தொகையை, அஞ்செட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கர் வழங்கி பாராட்டினார்.

    அதே போல், நீட் தேர்வில் 536 மதிப்பெண்கள் பெற்ற மாணவன் மாதவனுக்கு 5 ஆயிரம், 330 மதிப்பெண் பெற்ற மாணவி ஓவியாவிற்கு 5 ஆயிரமும் வழங்கினார்.

    விழாவில், பள்ளி தலைமை ஆசிரியர் கணேஷ் மூர்த்தி வரவேற்றார். காதர்பாஷா, ரங்கசாமிகார்த்திக் பாபு, சிவகாமி, சண்முகம், வெங்கடராஜ், பெருமாள், அன்பரசன், பட்டதாரி உதவி தலைமை ஆசிரியர் முனிராஜ், ஆசிரியர் பயிற்றுனர் நேரு, ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×