search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயில்வே கோட்ட அதிகாரிகளுக்கு பாராட்டு விழா
    X

    ரெயில்வே கோட்ட அதிகாரிகளுக்கு பாராட்டு விழா

    • அறந்தாங்கி வர்த்தக சங்கம் மற்றும் கோட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்கம் சார்பில் ரயில் சேவையை மீண்டும் தொடங்க ஒத்துழைப்பு செய்த ரயில் கோட்ட அதிகாரிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
    • 15 ஆண்டுகளுக்கு ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வர்த்தக சங்கம் மற்றும் கோட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்கம் சார்பில் ரயில் சேவையை மீண்டும் தொடங்க ஒத்துழைப்பு செய்த ரயில் கோட்ட அதிகாரிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.அறந்தாங்கியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மீட்டர் கேஜ் பாதையை அகல ரயில் பாதையாக மாற்ற பணிகள் நடைபெற்று வந்தது. அதன் காரணமாக அறந்தாங்கி மார்கமாக செல்லக் கூடிய ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அகல ரயில் பாதை பணிகள் முடிவுற்றும் சில ஆண்டுகள் ரயில் சேவைகள் தொடங்கப்படாத நிலையில் பல்வேறு கட்ட முயற்சிகளுக்கு பின்பு ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. இதற்கு காரணமாக செயல்பட்ட ரயில் கோட்ட அதிகாரிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. வர்த்தக சங்க தலைவர் காமராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்சி ரயில் கோட்ட முதுநிலை இயக்க மேலாளர் ஹரிகுமார், திருச்சி ரயில் கோட்ட வணிக மேலாளர் மோகனப்பிரியா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மேலும் அறந்தாங்கி மார்க்கமாக சென்னைக்கு செல்ல வாரத்தில் 3 நாட்கள் ரயில்கள் இயக்கப்படுகிறது, இதனை பழைய முறைப்படி வாரத்தில் அனைத்து நாட்களும் ரயில் சேவை இயக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அதிகாரிகளிடம் முன்வைக்கப்பட்டது. அதனை அதிகாரிகள் ஏற்று கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும் என உறுதி அளித்தனர். நிகழ்ச்சியில் வர்த்தக சங்க செயலாளர் தவசுமணி, கோட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்க தலைவர் குமார் உள்ளிட்ட வர்த்தக சங்கம் மற்றும் ரயில் கோட்ட உபயோகிப்பாளர் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×