search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் மாவட்டத்தில் தொழில் நல்லுறவு விருது பெற விண்ணப்பிக்கலாம்
    X

    நாமக்கல் மாவட்டத்தில் தொழில் நல்லுறவு விருது பெற விண்ணப்பிக்கலாம்

    • 2017, 2018, 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளுக்கான தொழில் நல்லுறவு விருது (குட் இண்டஸ்ட்ரியல் ரிலேஷன்ஸ் அவார்ட்) வழங்கப்பட உள்ளது.
    • சிறப்பு விருதுகளை ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதியின் தலைமையில் அமைக்கப்பட்ட முத்தரப் புக்குழு தேர்ந்தெடுக்கும்.

    நாமக்கல்:

    தமிழ்நாடு அரசின் தொழிலாளர் துறை மூலமாக 2017, 2018, 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளுக்கான தொழில் நல்லுறவு விருது (குட் இண்டஸ்ட்ரியல் ரிலேஷன்ஸ் அவார்ட்) வழங்கப்பட உள்ளது.

    வேலையளிப்பவர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே தொழில் அமைதியும், நல்ல தொழில் உறவு நிலவுவதையும் ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு தொழில் நல்லுறவு பரிசுத் திட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

    2017, 2018, 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளுக்கான சிறப்பு விருதுகளை ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதியின் தலைமையில் அமைக்கப்பட்ட முத்தரப் புக்குழு தேர்ந்தெடுக்கும்.

    இவ்விருதுக்குரிய விண்ணப்ப படிவங்களை தொழிலாளர் துறையின் வெப்சைட்டில் இருந்து டவுன்லோட் செய்து விண்ணப்பிக்கலாம்.

    அந்தந்த மாவட்டத்தி லுள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம், தொழிலாளர் துணை ஆணையர்(சமரசம்) அலுவலகம், வட்டார தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகங்கள், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர் அலுவலகங்கள் மற்றும் சென்னை, தேனாம்பேட்டை, டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து படிவங்கள் பெற்றும் விண்ணப்பிக்கலாம்.

    ஒவ்வொரு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத் துடனும், விண்ணப்பக் கட்டணம் செலுத்திய விவரத் தினையும் இணைத்து சென்னை, தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திற்கு 31.03.2023-க்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

    ஒவ்வொரு விண்ணப் பத்துடனும், விண்ணப்பக் கட்டணமாக, விண்ணப் பித்தவர் தொழிற்சங்க மானால் ரூ.100-ம், வேலையளிப்பவரானால் ரூ.250-ம், ஆன்லைன் மூலம் செலுத்தி, அதற்கான அசல் சலானை இணைத்து அனுப்ப வேண்டும் என நாமக்கல் தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) திருநந்தன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×