என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அக்னிபாத் திட்டம்: விமானப்படையில் ஆள் சேர்ப்பு!
    X

    கோப்பு படம்

    அக்னிபாத் திட்டம்: விமானப்படையில் ஆள் சேர்ப்பு!

    • இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர்வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு கல்வித்தகுதியுடைய திருமணமாகாத ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

    தேனி:

    இந்திய விமானப்படை யில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னி வீர்வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு ள்ளது. இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலம் வரும் 31-ந் தேதிக்குள் விண்ண ப்பிக்க வேண்டும். இந்த தேர்வு மே மாதம் 20-ந் தேதி ஆன்லைன் வாயிலாக நடைபெற உள்ளது.

    10-ம் வகுப்பு 12-ம் வகுப்பு மற்றும் அதற்கு நிகரான கல்வித்தகுதி உடைய திருமணமாகாத ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பாக 26.12.2002 அன்றும் மற்றும் அதற்குப்பின் பிறந்தவர்கள், 26.06.2006 அன்றும் மற்றும் அதற்குமுன் பிறந்தவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்விற்கு விண்ணப்பம் செய்த மனுதாரர்கள் மேலும் விபரங்களுக்கு தேனி, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொள்ளலாம் என தேனி, மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×