search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உண்டு உறைவிடப் பள்ளியை நடத்த தொண்டு நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு
    X

    உண்டு உறைவிடப் பள்ளியை நடத்த தொண்டு நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

    • 2 உண்டு உறைவிடப் பள்ளியை நடத்துவதற்கு அனுபவம் மற்றும் ஆர்வமுள்ள பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
    • அந்நிறுவனத்தின் பெயரில் 80 ஜி அல்லது 12 ஏஏ எக்சம்சன் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம் கொல்லப்பள்ளியில் செயல்பட்டு வரும் பள்ளி செல்லா, இடைநின்ற 14 வயதிற்குட்பட்ட 100 பெண் குழந்தைகள் தங்கி படிக்கும் வகையில் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளி மற்றும் 100 மாணவ, மாணவிகள் தங்கி படிக்கும் வகையில் கெலமங்கலம் ஒன்றியம், தேன்கனிக்கோட்டை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப் பள்ளி என மொத்தம் 2 உண்டு உறைவிடப் பள்ளியை நடத்துவதற்கு அனுபவம் மற்றும் ஆர்வமுள்ள பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    விண்ணப்பங்கள் அனுப்பும் தொண்டு நிறுவனங்கள், பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகளுக்கான கல்விப் பணியில் குறைந்தது 3 ஆண்டு கால அனுபவம் கண்டிப்பாக பெற்றிருத்தல் வேண்டும்.

    தொண்டு நிறுவனங்கள் சொசைட்டி ஆக்ட், டிரஸ்ட் ஆக்ட்-ன் கீழ் கண்டிப்பாக பதிவு செய்திருக்க வேண்டும்.

    அப்பதிவு அவ்வப்போது புதுபிக்கப்பட்டிருக்க வேண்டும். தொண்டு நிறுவனங்கள், அந்நிறுவனத்தின் பெயரில் 80 ஜி அல்லது 12 ஏஏ எக்சம்சன் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

    தமிழக, மத்திய அரசால் நீக்கம் செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்கள் பட்டியலில் இருத்தல் கூடாது. அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் மானியம் பெற்று செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு தொண்டு நிறுவனங்கள் இணையதளத்தில் பதிவு செய்து, தனி அடையாளம் (யுனிக்கோடு ஐடி) பெற்றிருத்தல் வேண்டும்.

    மேலும், அந்த நிறுவனத்தின் பெயரில் பேன் கார்டு வைத்திருக்க வேண்டும். கடந்த 3 நிதி ஆண்டுகளில் சுய நிதிக்குழுவின் வரவு, செலவு சார்ந்த ஆண்டு தணிக்கை விவரங்களை வைத்திருத்தல் வேண்டும்.

    நிதி நிலை விவரங்கள் திருப்திகரமாக இருத்தல் வேண்டும். கடந்த 3 நிதி ஆண்டுகளுக்கு வருமான வரி செலுத்திருக்க வேண்டும். இதுவரை எவ்வித துறை ரீதியான புகார்களுக்கும் இடமளி க்காமல் பணியாற்றிய மிக சிறந்த தொண்டு நிறுவனமாக இருத்தல் வேண்டும்.

    இந்த தகுதியுடைய தொண்டு நிறுவனங்கள், விண்ணப்பத்தை கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாவட்ட திட்ட அலுவலகத்தில் பெற்று கருத்துருக்களை வருகிற 19-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×