search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போதை ஒழிப்பு விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி
    X

    போதை ஒழிப்பு விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி

    • நாட்டு நலப்பணித்திட்ட அலகு 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் வரவேற்றாா்.
    • போதை ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழியையும் எடுத்துக் கொண்டனா்.

    திருப்பூர் :

    திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு 2, திருப்பூா் வடக்கு காவல் நிலையம் ஆகியன சாா்பில் போதை இல்லா தமிழகம் என்ற விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி மாநகராட்சி வெள்ளிவிழாப் பூங்காவில் நடைபெற்றது.

    நாட்டு நலப்பணித்திட்ட அலகு 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் வரவேற்றாா். இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று திருப்பூா் வடக்கு சரக உதவி ஆணையா் அனிக்குமாா் பேசினாா்.நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் போதை ஒழிப்பு தொடா்பான விழிப்புணா்வை கலை நிகழ்ச்சி மூலமாக ஏற்படுத்தியதுடன் போதை ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழியையும் எடுத்துக் கொண்டனா். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் கிருஷ்ணன் செய்திருந்தாா்.

    Next Story
    ×