என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாமக்கல்லில் அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டம்
- பிரதான அங்கன்வாடி மையங்களை மினி மையமாக மாற்றுவதையும், மினி மையங்களை பிரதான மையங்க ளோடு இணைப்ப தையும் தமிழக அரசு கைவிட வேண்டும்.
- ஊட்டச்சத்தை மேம்படுத்துதல் என்ற பெயரில் மையங்கள் இணைப்பதை கைவிட வேண்டும்.
நாமக்கல்:
தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளின் வருகையை கணக்கில் கொண்டு, பிரதான அங்கன்வாடி மையங்களை மினி மையமாக மாற்றுவதையும், மினி மையங்களை பிரதான மையங்க ளோடு இணைப்ப தையும் தமிழக அரசு கைவிட வேண்டும். ஊட்டச்சத்தை மேம்படுத்துதல் என்ற பெயரில் மையங்கள் இணைப்பதை கைவிட வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இதையொட்டி நாமக்கல் மாவட்ட அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில், நாமக்கல் பார்க் ரோட்டில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. சங்க மாவட்ட தலைவர் பாண்டிமாதேவி தலைமை வகித்தார். திரளான அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியா ளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு, கோரிக்கைளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
முன்னதாக சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் வேலுசாமி, துணை செயலாளர் சிவராஜ் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்