என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு வழங்கிய செல்போன்களை அதிகாரிகளிடம் ஒப்படைக்க அங்கன்வாடி ஊழியர்கள் முடிவு
    X

    அரசு வழங்கிய செல்போன்களை அதிகாரிகளிடம் ஒப்படைக்க அங்கன்வாடி ஊழியர்கள் முடிவு

    • 2 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாததால் அவதிக்குள்ளாகினர்.
    • வட்டார திட்ட அலுவலர்களிடம், ஊழியர்கள் ஒப்படைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

    ஓசூர்,

    ஓசூரில் உள்ள சி.ஐ.டி.யு. அலுவலகத்தில், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின், மாவட்ட கோரிக்கை பேரவை கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு, மாவட்ட நிர்வாகி தேவி தலைமை தாங்கினர். மாவட்ட தலைவர் கஸ்தூரி முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் கோவிந்தம்மாள் ஆகியோர் கூட்டத்தில் பேசினார்கள்.

    இந்த கூட்டத்தில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் உள்ள அரசு கொடுத்த செல்போன்களை, இன்று (29-ந்தேதி) அந்தந்த வட்டார திட்ட அலுவலர்களிடம், ஊழியர்கள் ஒப்படைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

    மேலும், அங்கன்வாடி ஊழியர்களுக்கும் உதவியாளர்களுக்கும் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பல முறை மாவட்ட இயக்குனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்து மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், நாளை (30-ந் தேதி) இந்த கோரிக்கைகள் குறித்து இயக்குனர்கள் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தவும், மாநில தலைமை இயக்குனர் அலுவலகம் முன்பு நடத்தப்படும் மாநிலம் தழுவிய மறியல் போராட்டத்தில் மாவட்டத்தில் இருந்து திரளாக ஊழியர்கள் சென்று கலந்து கொள்வது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் சங்க நிர்வாகி பார்வதி நன்றி கூறினார்.

    Next Story
    ×