search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெண்டைக்காய் விலை வீழ்ச்சி
    X

    வசந்தபுரம் பகுதியில் வெண்டைக்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    வெண்டைக்காய் விலை வீழ்ச்சி

    • பரமத்தி வேலூர் தாலுகா, பரமத்தி வேலூர், கந்தம்பாளையம், ஜேடர்பாளையம், சோழசிராமணி ஆகிய பகுதிகளில் வெண்டைக்காய் சாகுபடி செய்து வருகின்றனர்.
    • 2 மடங்காக அதிகரித்து உள்ளது, அதே நேரத்தில் வெண்டைக்காய் விலை பாதியாக குறைந்து உள்ளது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா, பரமத்தி வேலூர், கந்தம்பாளையம், ஜேடர்பாளையம், சோழசிராமணி ஆகிய பகுதிகளில் வெண்டைக்காய் சாகுபடி செய்து வருகின்றனர்.

    தற்போது பருவநிலை மாற்றம் வெண்டைக்காய் விளைச்சலுக்கு சாதகமாக இருப்பதால் வெண்டைக்காய் விளைச்சல் 2 மடங்காக அதிகரித்து உள்ளது. ஆனால் அதே நேரத்தில் வெண்டைக்காய் விலை பாதியாக குறைந்து உள்ளது.

    கடந்த ஆகஸ்ட் மாதங்களில் வியாபாரிகளுக்கு மொத்த விலையில் கிலோ ரூ.20-க்கு விற்ற வெண்டைக்காய், தற்போது கிலோ ரூ.7 ஆக குறைந்து உள்ளது. விலை சரிவால் வெண்டைக்காய் பயிரிட்ட விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

    இதுகுறித்து கந்தம்பாளையம் அருகே வசந்தபுரத்தைச் சேர்ந்த விவசாயி பாப்பாத்தி கூறுகையில், கடந்த பல வருடங்களாக எங்களது விவசாய தோட்டத்தில் வெண்டைக்காய் சாகுபடி செய்து வருகிறோம். ஒரு கிலோ வெண்டைக்காய் விதை ரூ.7 ஆயிரத்திற்கு வாங்குகிறோம்.

    50 சென்ட் இடத்திற்கு இந்த விதை போதுமானது. 4 மாதத்தில் காய் காய்க்கும். 4 மாதம் மட்டுமே இதை அறுவடை செய்ய முடியும். பிறகு செடி வாடி விடும்.

    ஒரு கிலோ விதை வாங்கி சாகுபடி செய்ய மற்றும் மருந்து, உரம் என ரூ.30,000 வரை செலவாகிறது. ஆனால் இந்த வருடம் போட்ட முதலீடு எடுக்க முடியாமல் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. தினசரி காய் பறிக்க ஒரு ஆளுக்கு ரூ.300 வரை கூலி கொடுக்க வேண்டி உள்ளது. வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து மிகவும் குறைந்த விலைக்கு கேட்கின்றனர். ஆனால் வியாபாரிகள் வாங்கி கிலோ ரூ.40 வரை விற்பனை செய்கின்றனர். வெண்டைகாய் பயிரிட்ட விவசாயிகளை காக்க அரசு நல்ல தீர்வு காண வேண்டும் என கூறினர்.

    Next Story
    ×