search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாநில செயலாளர் மறைவுக்கு அம்பேத்கார் மக்கள் இயக்கம் இரங்கல்
    X

    மாநில செயலாளர் மறைவுக்கு அம்பேத்கார் மக்கள் இயக்கம் இரங்கல்

    • நேரடியாக சென்று உரிய முறையில் முறையிட்டு அவர்களுக்கு நீதி பெற்று கொடுத்தவர்.
    • ஏழை மக்களின் நல்வாழ்வுக்காகவும், அவர்கள் மேம்பாட்டிற்காகவும் உழைத்தவர்

    தருமபுரி,

    அம்பேத்கர் மக்கள் இயக்க மாநில செயலாளர் தர்மபுரி மணிவண்ணன் மறைவுக்கு மாநில தலைவர் சேலம் ஜங்சன் அண்ணாதுரை இரங்கல் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அம்பேத்கார் மக்கள் இயக்கத்தை பட்டி தொட்டி எல்லாம் கால் ஊன்ற செய்த தர்மபுரி மணிவண்ணன் அவர்கள் இறந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனை அடைந்தேன். அவர் அம்பேத்கார் மீதும், டாக்டர் வை.பா அவர்கள் மீதும் அதிக பற்று கொண்டவர். தன் வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும், வாழ்வதற்கு வசதியின்றி,வழி இன்றி தவித்த ஏழை மக்களின் நல்வாழ்வுக்காகவும், அவர்கள் மேம்பாட்டிற்காகவும் உழைத்தவர்

    .மக்கள் பிரச்சனைகளை ஆட்சியாளர்களிடமும், அரசு அதிகாரியிடமும் நேரடியாக சென்று உரிய முறையில் முறையிட்டு அவர்களுக்கு நீதி பெற்று கொடுத்தவர். 1977 -ம் ஆண்டு அம்பேத்கார் மக்கள் இயக்கம் ஆரம்பித்த நாள் முதற்கொண்டு இந்த நாள் வரை தன் இறுதி மூச்சு வரை அம்பேத்கார் மக்கள் இயக்கத்தின் போர்வாளாக திகழ்ந்த தர்மபுரி மணிவண்ணன் இறப்பு அம்பேத்கார் மக்கள் இயக்கத்திற்கு மிகுந்த பேரிழப்பு.

    அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு அம்பேத்கார் மக்கள் இயக்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், வருத்துவத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறூ அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×