search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்பேத்கர் விருது:  விண்ணப்பங்கள் வரவேற்பு
    X

    அம்பேத்கர் விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

    • ஆண்டு தோறும் அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது.
    • பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றும், தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் தாழ்த்த ப்பட்ட மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பலர் அரிய தொண்டாற்றி வருகிறார்கள்.

    அவர்களில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த மக்களின் பொருளாதாரம் மற்றும் கல்வி நிலை யை உயர்த்துவதற்கும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவும் பாடுபட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர்களில் ஒருவருக்கு ஆண்டு தோறும் அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது.

    அந்த வகையில் 2023-ம் ஆண்டு திருவள்ளுவர் திருநாளன்று அண்ணல் அம்பேத்கர் விருது பெற விரும்பும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வர்கள் இணையத்திலிருந்து இந்த விருதுக்கான விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்தும், அல்லது சென்னை ஆதிதிராவிடர் நல ஆணையர் அலுவலகத்தில் அல்லது கிருஷ்ணகிரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றும், தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், அறை எண்.26-ல் சமர்ப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×