search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
    X

    நிகழ்ச்சியில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. 

    அரசு கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

    • தங்களது வாழ்க்கை அனுபவங்கள் குறித்து கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
    • கல்லூரிக்கு ரூ.2.30 லட்சம் செலவில் 5 குளிர்சாதன பெட்டிகளை வழங்கினார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே புத்தூர் சீனிவாசா சுப்பராயா அரசு தொழில்நுட்ப கல்லூரியில் கடந்த 1989-92-ம் ஆண்டு வரை கட்டிடவியல், மின்னியல், மின்ணணுவியல், எந்திரவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் படித்தவர்கள் தற்போது 31 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இதே கல்லூரியில் படித்த வகுப்பறையிலேயே சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் குமார், துணை முதல்வர் ஆரோக்கியராஜ், முன்னாள் முதல்வர் தங்கமணி முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பா ளர்களாக 1989-92-ம் ஆண்டு பயிற்றுவித்த பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    முன்னாள் மாணவர்கள் தங்களது வாழ்க்கை அனுபவங்கள் குறித்து கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    தொடர்ந்து, அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

    வெளிநாடுகளில் இருந்து வரமுடியாத முன்னாள் மாணவர்கள் இணையம் மூலமாக கலந்து கொண்டு தங்களது நினைவுகளை பகிரிந்து கொண்டனர்.

    முடிவில், கல்லூரிக்கு ரூ.2.30 லட்சம் செலவில் 5 குளிர்சாதன பெட்டிகளை முன்னாள் மாணவர்கள் கருத்தரங்கத்திற்கு அமைத்து கொடுத்தனர்.

    Next Story
    ×